(கு - ரை.) 1. மாகவிசும்பு: புறநா.35: 18, குறிப்புரை. 2 - 3. ஒலிக்கும் முரசினையும் இனமிக்கயானைகளை நிலத்தில் மிகச் செலுத்திய ஆஞ்ஞாசக்கரத்தையுமுடையஅரசர்களும். 4. வேட்ப - விரும்புவார். 5. நல்ல மணமுடைய பொருள்களை நீக்கியதனால்மணமில்லாத வெளுத்த தலைமயிரை யுடையதாய் (6) எனக்கூட்டுக; புறநா. 276: 1. 8. அரிக்குரல் - அரித்தெழுகின்றஓசை. அரிக்குரற்றண்ணுமை: புறநா. 249: 4, 369: 21, 396:4. 12. நவி - கோடாலி. மரத்தின் -மரத்தைப்போல. 13. “கணையும் வேலுந் துணையுற மொய்த்தலிற்,சென்ற வுயிரினின்ற யாக்கை, இருநிலந் தீண்டா வகை”(தொல். புறத்திணை. சூ. 16); “அப்பணைக் கிடந்தகாளை” (தகடூர்யாத்திரை) ஆண்மையோன்றிறத்தை (13) நேமியோரும்(3) வேட்ப (4) என்க; பு. வெ. 76-ஆம் பாடலைப்பார்க்க. (270)
|