(கு - ரை.) 1. பழுனிய - முதிர்ந்த. 2. பாறுமயிர் - பரந்து மேல்நோக்கிய மயிர். 1 - 2. "பாறுமயி ரவியத், தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்" (புறநா. 374 : 3 - 4) 4. இனையல் - வருத்தல். கிணைதொடா - தடாரிப்பறையை வாசித்து. 5. அவியுணவினோர் - தேவர்; "அவியுணவி னான்றார்" (குறள், 413). தேவர் புறங்காப்ப. 5 - 6. வாழும்படி நாடோறும் புறங்காப்பவென்று. 8. கவி வண்கையான் - கொடையாற் கவிந்த கையோடு. 9 - 10. பெற்றோராகிய பிறர்க்கு. 10 - 11. "பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப், பிறருவம மாகா வொருபெரு வேந்தே" (பதிற். 73 : 2 - 3), ‘பொருநனென்றது தான் பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு’ (மதுரைக். 42, ந.) 12. அது - உவமமின்மையை. மழுகி : "நிறையுமதி யிரவுமழுகி நிலைகெட நகைத்து" (தக்க. 36) 13. எற்காணூஉ - என்னைக்கண்டு. 14. கிணைஞனை - கிணைஞனாகிய நீ; ஐ : முன்னிலையை விளக்கி நின்றது. 15. புரவலை - எம்மாற் பாதுகாத்தற்குரியாய். என்ன - என்று சொல்லி. 16. கடறு - காடு. 18. சேறுபட்ட தசும்பு - கட்குடம். 19. "கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப" (பொருந. 98) 19 - 20. "கனவென மருள வல்லே நனவின், நல்கி யோனே நசைசா றோன்றல்" (புறநா.387 : 26 - 7) 23. பொன் - கிம்புரி; ஆகுபெயர். 24. கவர்பரி - பகுந்து விரையும் செலவு : "கவர்பரிப் புரவியர்" (சிலப். 5 : 159). மான் - குதிரை. 27. கதழிசை - விரைதல் பொருந்திய. 28. வாளின் வாழ்நர் - வாள்வீரர். 30. மன்னிய நெடிது - நெடுங்காலம் வாழ்வானாக. (377)
|