377
பனிபழுனிய பல்யாமத்துப்
பாறுதலை மயிர்நனைய
இனிது துஞ்சுந் திருநகர் வரைப்பின்
இனைய லகற்றவென் கிணைதொடாக் குறுகி
5அவியுணவினோர் புறங்காப்ப
அறநெஞ்சத்தோன் வாழநாளென்
றதற்கொண்டு வரலேத்திக்
கரவில்லாக் கவிவண்கையான்
வாழ்கவெனப் பெயர்பெற்றோர்
10பிறர்க்குவமந் தானல்லது
தனக்குவமம் பிறரில்லென
அதுநினைந்து மதிமழுகி
ஆங்குநின்ற வெற்காணூஉச்
சேய்நாட்டுச் செல்கிணைஞனை
15நீபுரவலை யெமக்கென்ன
மலைபயந்த மணியுங் கடறுபயந்த பொன்னும்
கடல்பயந்த கதிர்முத்தமும்
வேறுபட்ட வுடையுஞ் சேறுபட்ட தசும்பும்
கனவிற் கண்டாங்கு வருந்தாது நிற்ப
20நனவி னல்கியோ னசைசா றோன்றல்
நாடென மொழிவோரவ னாடென மொழிவோர்
வேந்தென மொழிவோரவன் வேந்தென மொழிவோர்
........................... பொற்கோட் டியானையர்
கவர்பரிக் கச்சைநன்மான்
25வடிமணி வாங்குருள
..................... நற்றேர்க்குழுவினர்
கதழிசை வன்கணினர்
வாளின் வாழ்ந ரார்வமொ டீண்டிக்
கடலொலி கொண்ட தானை
30அடல்வெங் குருசின் மன்னிய நெடிதே.

(பி - ம்.) 4 ‘தாடகுறுகி’ 6 ‘நெஞ்சத்தோனாளென்று’ 12 ‘பழகி’ 16 ‘மலைபெயர்ந்த பொன்னும்......பயந்தமணியும்’ 20 ‘னல்கியோனென்கை’ 22 ‘வேந்தன’

திணை - அது; துறை - வாழ்த்தியல்.

சோழன் இராசசூயம்வேட்ட பெருநற்கிள்ளியை உலோச்சனார்.


(கு - ரை.) 1. பழுனிய - முதிர்ந்த.

2. பாறுமயிர் - பரந்து மேல்நோக்கிய மயிர்.

1 - 2. "பாறுமயி ரவியத், தண்பனி யுறைக்கும் புலரா ஞாங்கர்" (புறநா. 374 : 3 - 4)

4. இனையல் - வருத்தல். கிணைதொடா - தடாரிப்பறையை வாசித்து.

5. அவியுணவினோர் - தேவர்; "அவியுணவி னான்றார்" (குறள், 413). தேவர் புறங்காப்ப.

5 - 6. வாழும்படி நாடோறும் புறங்காப்பவென்று.

8. கவி வண்கையான் - கொடையாற் கவிந்த கையோடு.

9 - 10. பெற்றோராகிய பிறர்க்கு.

10 - 11. "பிறர்க்குநீ வாயி னல்லது நினக்குப், பிறருவம மாகா வொருபெரு வேந்தே" (பதிற். 73 : 2 - 3),

‘பொருநனென்றது தான் பிறர்க்கு உவமிக்கப்படுவானென்னும் பொருட்டு’ (மதுரைக். 42, ந.)

12. அது - உவமமின்மையை. மழுகி : "நிறையுமதி யிரவுமழுகி நிலைகெட நகைத்து" (தக்க. 36)

13. எற்காணூஉ - என்னைக்கண்டு.

14. கிணைஞனை - கிணைஞனாகிய நீ; ஐ : முன்னிலையை விளக்கி நின்றது.

15. புரவலை - எம்மாற் பாதுகாத்தற்குரியாய். என்ன - என்று சொல்லி.

16. கடறு - காடு.

18. சேறுபட்ட தசும்பு - கட்குடம்.

19. "கனவென மருண்டவென் னெஞ்சே மாப்ப" (பொருந. 98)

19 - 20. "கனவென மருள வல்லே நனவின், நல்கி யோனே நசைசா றோன்றல்" (புறநா.387 : 26 - 7)

23. பொன் - கிம்புரி; ஆகுபெயர்.

24. கவர்பரி - பகுந்து விரையும் செலவு : "கவர்பரிப் புரவியர்" (சிலப். 5 : 159). மான் - குதிரை.

27. கதழிசை - விரைதல் பொருந்திய.

28. வாளின் வாழ்நர் - வாள்வீரர்.

30. மன்னிய நெடிது - நெடுங்காலம் வாழ்வானாக.

(377)