(கு - ரை.) 1. பாறுபட - கெட. பறைந்த - தேய்ந்த. 2. கூகை - கோட்டான். 3. பல்ல - பல்லையுடையனவாய். 4. தழூஉப்பற்றி - தழுவி. 5. விளர் - வெண்மை; "விளரூன் றின்ற வீங்குசிலை மறவர்", "விளரூன் றின்ற வேட்கை" (அகநா.89 : 10, 265 : 15); நற். 41 : 8. 8. காடு - மயானம். 9. வைகல் - கழிதல். நினக்கும் வைகல் வருதல் அற்று. 10. வசை - பழி. இசை - புகழ். 10 - 12. "கெடுவ லெனப்பட்டக் கண்ணுந் தனக்கோர், வடுவல்ல செய்தலே வேண்டும் - நெடுவரை, முற்றுநீ ராழி வரையகத் தீண்டிய, கற்றேயுந் தேயாது சொல்" (பழ.394). 14. கொலம்படை-பொற்கலனை. 15. இழைகிளர் நெடுந்தேர் : புறநா.123 : 4, குறிப்புரை.அருகாது- குறையாமல். கலித்.99 : 7. 16. விடுவையாயின் - கொடுப்பாயாயின்; ‘இடுவை’ என்று பிரிப்பினும் பொருந்தும். வெள்ளென - யாவர்க்கும் தெரிய; புறநா. 207 : 9. 18. புகழ் நீடுவிளங்கும். (359)
|