திணை - கரந்தை; துறை - கையறுநிலை. ................... ...................... .............. (இ - ள்.) பெரிய களிற்றின் அடிபோலத் தோன்றும் ஒரு கண்ணினை யுடைத்தாகிய பெரிய பறையினையுடைய இரவலனே! நீ போகின்றாயாயின் தொழாயாய்ப் போதலைப் பரிகரிப்பாயாக; தவறாதே.........யிடைவிடாது வண்டுகள் மேம்பட்டு வாழும், இக்கொடிய வழி; பல ஆக்களாகிய திரண்ட நிரை மீண்டு தன்னோடு போதரப் போந்து இயல்பாகிய போர்த் தொழிலையுடைய வீரர் இரிந்தோடத் தான்போகானாய் வில் உமிழப்பட்ட விரைந்த அம்பு குளிப்பக் கரையைக் கொல்லும் புனலின் கண் அணைபோல எதிர்நின்று விலக்கியவனது கல்லை-எ - று. புனற்சிறையின் விலங்கியோன்கல்லைத் தொழாதனை கழிதலை ஓம்பு; தொழவே அவ்வறநிலையாறு வண்டுமேம்படுமெனக் கூட்டுக. தொழுது போகவே கொடுங்கானம் மழைபெய்தலாற் குளிருமென்பான், காரியமாகிய வண்டு மேம்படுதலைக் கூறினான். வண்டென்பது, மறவருள் ஒரு சாதியென்பாரும் உளர். ஆறு வண்டு மேம்படூஉமென இடத்துநிகழ்பொருளின்தொழில் இடத்துமேல் ஏறிநின்றது. |