218
பொன்னுந் துகிரு முத்து மன்னிய
மாமலை பயந்த காமரு மணியும்
இடைபடச் சேய வாயினுந் தொடைபுணர்ந்
தருவிலை நன்கல மமைக்குங் காலை
5ஒருவழித் தோன்றியாங் கென்றுஞ் சான்றோர்
சான்றோர் பால ராப
சாலார் சாலார் பாலரா குபவே.

(பி - ம்.) 7 ‘பாலாரா குகவே’

திணையும் துறையும் அவை.

பிசிராந்தையார் வடக்கிருந்தாரைக் கண்ட கண்ணகனார் (பி - ம். பிசிராந்தையாரைக் கண்ட நத்தத்தனார்) பாடியது.

(இ - ள்.) பொன்னும் பவளமும் முத்தும் நிலைபெற்ற பெரிய மலை தரப்பட்ட விரும்பத்தக்க மணியும் ஒன்றற்கொன்று இடைநிலம்படச் சேய் நிலத்தினவாயினும் கோவைபொருந்தி அரிய விலையினையுடைய நல்ல அணிகலங்களைச் செய்யுங்காலத்து ஓரிடத்துத் தோன்றினாற்போல எந்நாளும் அமைந்தோர் அமைந்தோர்பக்கத்தராவார்; அமைதியில்லார் அமைதியில்லார் பக்கத்தராவர்-எ - று.

சான்றோர்குழுவினைப் புகழுங்கருத்தாகலின், அவர்க்கேற்ற உவமம் கூறினார்; சாலாதார்க்கும் ஏற்றவுவமம் வருவித்துக்கொள்க.

தொடைபுணர்ந்து தோன்றியாங்கென இயையும்.


(கு - ரை.) 1. பெருங். 4. 17 : 75.

‘தன்னின முடித்த லென்பதனால், பொன்னுந் துகிருமுத்து.....மணியும் என எண்ணுங்காலும் இனமாயபொருளே எண்ணப்படுமென்பது கொள்க.’ (தொல். கிளவி. சூ. 16, இளம். சே., கல்.)

2. “கல்லிற் பிறக்குங் கதிர்மணி” (நான்மணிக். 7); “மலையிடைப் பிறவா மணியே யென்கோ” (சிலப். 2 : 77)

4. பெருங். 4. 2 : 82.

5-6. “பண்காணுந் தமிழ்ப்புலவீ ரினத்தொடே யினஞ்சேரும் பரிசே போல” (தனிப்பாடல்); “நற்றா மரைக்கயத்தி னல்லன்னஞ் சேர்ந்தாற்போற், கற்றாரைக் கற்றாரே காமுறுவர்” (மூதுரை, 24)

(218)