(கு - ரை.) 1. ஏர் - ஒப்பு ; “இலவம் போதே ரெழிற்றகைய சீறடிகள்” (சீவக. 1588) 2. கொடும்பூண் - வளைந்த ஆபரணம் ; “விளங்குமணிக் கொடும் பூண் விச்சிக் கோவே” (புறநா. 200 ; 8) 3. பசலைநிலவு - இளநிலவு. 5. கொடா - திறைகொடாத. 4 - 5. “பெருங்களிற் றடியிற் றோன்று மொருகண், இரும்பறை யிரவல” (புறநா. 263 : 1 - 2) 3 - 5. “இருணிலாக் கழிந்த பகல்செய் வைகறை, ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப வொற்றி” (புறநா. 394 : 6 - 7) 7. குருதிப்பெரும்பாட்டீரத்து - இரத்தப் பெருக்காலுளதாகிய ஈரத்தையுடைய. 8. களம் - தானியக்கதிரை அடிக்குங்களமும் போர்க்களமும். 10. வெள்ளைவரகு - கவடி. கொள் - குடைவேல். 6 - 10. பகைவருடைய அரண்களையழித்துக் கழுதையேரால் உழுது அந்நிலத்தில் வெள்ளைவரகும் கொள்ளும் வித்துதல் அரசர்க்கியல்பு. 9 - 11. “வெள்வாய்க் கழுதைப் புல்லினம் பூட்டிப், பாழ்செய் தனையவர் நனந்தலை நல்லெயில்” (புறநா. 15 : 2 - 3), “வடதிசை மன்னர் மன்னெயின் முருக்கிக், கவடி வித்திய கழுதையே ருழவன்” (சிலப். 27 : 225 - 6), “எழுதெழின் மாடத் திடனெலா நூறிக், கழுதையேர் கையொளிர்வேல் கோலா - உழுததற்பின், வெள்வரகு கொள்வித் திடினும் விளியாதாற், கள்விரவு தாரான் கதம்” (பு. வெ. 120) “இடித்துவெளி செய்துநக ரெங்கணு நுழைந்தாங், கடுத்தமட வார்வயிறலைத்தன ரிரங்கக் கொடுத்திடு வளங்கள்பல கொள்ளைகொடு மண்ணின், எடுத்துவரு வெள்வரகு கொள்ளுட னிறைத்து” (காஞ்சிப். நாட்டுப். 28) என்பவைகள் இவ்வடிகளோடு ஒப்பிடற்பாலன. 10 - 12. “இன்னும் துறையென்றதனானே புறத்தோன் கவடி வித்துதலும் தொகைநிலைப்பாற்பட்டுழி அகத்தோர்க்குச் செல்லாமை கொள்க. அது, ‘மதியேர் வெண்குடை’ என்னும் புறப்பாட்டினுள் ‘வெள்ளை வரகுங் கொள்ளும் வித்தும், வைக லுழவ வாழிய பெரிதெனச், சென்றியா னின்றனெ னாக’ எனவரும்” (தொல். புறத்திணை. சூ. 13, ந.) 13. பகட்டிலை - பெரிய இலை. “ஊருண் கேணி யுண்டுறைத் தொக்க, பாசி” (குறுந். 399) 14. சிதாஅர் - கந்தைத்துணி ; “துன்னற் சிதாஅர் துவர நீக்கி” (பொருந. 81) 13 - 4. புறநா. 390 - 13 ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4) 16. புறநா. 376 : 14, குறிப்புரை. இவ்வடி, பொருந. 157 - 8-ஆம் அடிகளின் உரையில் மேற்கோளாக வந்துள்ளது. 17. கோள்மீன் - கோள்களாகிய மீன்களை ; சிறுபாண். 242 - 4. 18. கோள்முறை - கொள்ளும் முறை. 21. பிறங்கடை - வழித் தோன்றல் ; “படிகாத்தவர், பிறங்கடைப் பெரியோய்” (கம்ப. தாடகைவதை. 63) 20 - 21. “அரும்பெறன் மரபிற் கரும்பிவட் டந்தும்” (புறநா. 99 : 2) மு. இச்செய்யுள், கடைநிலையென்னுந்துறைக்கு மேற்கோளாகக் காட்டப்பட்டுள்ளது தொல். புறத்திணை. சூ. 36. ந. (392)
|