(பி - ம்.) 1 ‘முதுகனியேய்ப்பத்’2 ‘தீங்கட்டாரம்’ 4 ‘பைச்சூன்’ 7 ‘வளவைபெருநிரை’10 ‘ஆத்தர’ திணையும் துறையும் அவை.
.......................உலோச்சனார் பாடியது. உண்டாட்டாவது:- ‘’தொட்டிமிழுங் கழன்மறவர் மட்டுண்டு மகிழ்தூங்கின்று” (பு. வெ. 15) (இ - ள்.) முட்டாளையுடைய காரையினதுமுதிர்ந்த பழத்தையொப்ப முற்ற விளைந்த இனிய கந்தாரமென்னும்பெயரையுடைய மதுவையுடைய வேற்றுப்புலத்துத் தான்கொண்டுவந்துநிறுத்தின நிரையைக் கள்விலைக்கு நேராகக் கொடுத்துஉண்டு செவ்வித்தசையைத் தின்று செவ்விநிணமிக்கஎச்சிலாகிய ஈரமுடைய கையை வில்லினது புறத்தேதிமிர்ந்து வேற்று நாட்டின்கட் புக்கானே, புல்லியதாடியையுடைய காளை; இவ்விருந்த மறவர் ஒருகால் உண்பதன்முன்னேபெரிய ஆனிரையை இவ்வூர்ப்புறமெல்லாம் நிற்பக்கொடுதருகுவன்; யாவர்க்கும் வாராது அதற்பொருட்டுத்தொடுதலைப் பாதுகாத்துவைப்பாயாக, முதிர்ந்தமதுவையுடைய சாடியை; ஆவைக் கொண்டுவரக் கலந்ததூளியையுடையனாய் அம்மதுவை விரும்புவோன்விடாய்த்தலும் உண்டாம்-எ - று. தலைச்சென்றென்பது, தலைச்செலவெனத்திரிக்கப்பட்டது. இதற்குக் கள்விலையாட்டியிடத்தேசெல்லவென்றுமாம். ‘தீங்கட்டாரம்’ என்றோதிக் கள்ளாகிய இனியபண்டமெனினும் அமையும். ‘காய்தலுமுண்டு’ என்பதற்குக்கள்வெய்யோனாகலின், நின்னை வெகுளவுங்கூடுமென்பாரும்உளர். இவன் நிரைகொள்ளச் செல்கின்றமைகண்டார் கள்விலையாட்டிக்குக் கூறியது. |