(கு - ரை.) 1. முதிர் முத்தம் : “விளைந்துமுதிர்ந்த விழுமுத்தின்” (மதுரைக். 135). முத்தவார்மணல் : பெரும்பாண். 335; கலித். 136 : 5; பெருங். 1. 48 : 88, 2. 7 : 142, 5. 6 : 41. 1 - 3. புறநா. 36 : 3 - 5. 3. தெற்றி, வேதிகை - திண்ணை ; குரவை யென்னும் பொருளில், ‘தெற்றி’ என்பதற்குப் பின்னியாடுவது என்க; தெற்றல் - பின்னல். 4. விளங்கில் - மிக்க வளமுள்ளதொரு நகரம்; “மாவண் கடலன் விளங்கி லன்னவெம், மையெழி லுண்கண்” (அகநா. 81) 5. பொறையன் - மலைநாட்டின் தலைவன் ; சேரன் ; பொறை - மலை. ‘களங்கொள் பொறைய’ என்றது போர்க்களம் வென்ற வேந்தர்க்குரித் தாதலான்; புறநா. 4 : 3, 62 : 12; சிலப். 28 : 104 - 5; “ஏந்துவாட்டானை யிரிய வுறைகழித்துப், போந்துவாண் மின்னும் பொருசமத்து - வேந்தர், இருங்களி யானை யினமிரிந் தோடக், கருங்கழலான் கொண்டான் களம்”, “வென்று களங்கொண்ட வேல்வேந்தே” (பு. வெ. 180, 225); “தேன்மிடைந்த தாரினான் செங்களஞ் சிறந்ததே” (சீவக. 279); “கொன்று களங்கொள்ளுங் கொல்யானை வேந்தனை, வென்றுகளங் கொள்ளுமேல் வேந்து” (தொல். புறத். சூ. 5, ந. மேற்.) 8. கைம்முற்றல : இதுபோன்ற மொழிகளிலுள்ள கையென்பதை வினைச்சொல்லோடு வந்த உபஸர்க்கம் என்பர் பிரயோகவிவேக நூலு டையார். 12. வெறுப்பென்னும் உரிச்சொல் செறிவென்னும்பொருளில் வந்ததற்கும் (தொல். உரி. சூ. 51, சே,; சூ. 49, ந.; இ. வி. சூ. 211, உரை), ‘வெறுப்பு’ என்பது புறப்பொருட்கண் வந்ததற்கும் (தொல். பொருளியல், சூ. 53, ந.) மேற்கோள். 11 - 2. “மறம்புரி கொள்கை வயங்குசெந் நாவின், உவலை கூராக் கவலையி னெஞ்சின், நனவிற் பாடிய நல்லிசைக் கபிலன்” (பதிற். 85 : 10-13) 13 - 5. பழிகரப்பு அங்கதத்திற்கு மேற்கோள்; தொல். செய். சூ. 126, பேர். 15. கடப்பு - கடந்ததனாலாகிய வெற்றி. ‘பாடுவன்மன்’ என்பது முதலிய பகுதி வேறொரு பழைய உரை. (53)
1. “பலர்மேஎந் தோன்றிய கவிகை வள்ளல், நிறையருந் தானை வெல்போர் மாந்தரன், பொறையன்” (அகநா. 142 : 3 - 5)
|