(கு - ரை.) 1. முஞ்ஞை - முன்னை; “தாளிமுதனீடிய சிறுநறு முஞ்ஞை, முயல்வந்து கறிக்கு முன்றில்”(புறநா. 328 : 14 - 5) “முன்றிலாடு முஞ்ஞை மூதிலை கறிக்கும்” (தொல்.செய். சூ. 31 பேர். மேற்.) முசுண்டை - முசுட்டைக்கொடி.பம்பி - பரவி. 3. கைம்மான் வேட்டுவன் - யானைவேட்டையாடுபவன்:“யானை வேட்டுவன் யானையும் பெறுமே” (புறநா.214 : 4). கனை - மிகுதி. துயில்மடிந்தென - தூங்க. 4. பார்வை - பார்வை மிருகம்;மிருகங்களை வேட்டையில் அகப்படுத்துவதற்காக வளர்த்துப்பழக்கஞ்செய்யப்படுவது; பெரிய. கண்ணப்ப. 3. பிணையை. 5. தொழில் தீர்ந்த ஆண்மான். 6. மான்களின் சேர்க்கையை. 6 - 9. கணவன் எழுதற்கும் கலை பிணையினின்றுந்தீர்தற்கும் அஞ்சி மனையோள் புடைபெயர்ந்து நடவாமையால்.ஒலித்தல்: கானக் கோழி முதலியவற்றின் றொழில். 10. மான்றோலில் உலர்த்திய தினையாகியஉணவை. 11. இதல் - ஒருவகைப் பறவை; புறநா.319 : 6, குறிப்புரை. 12. ஆரம் - சந்தனம். ஆரல் -ஒருவகைமீன். 13. தடிவு - தடிதல், அறுத்தல்; தடி -துண்டமுமாம். வள்ளூரம் - இறைச்சி; “முழுஉவள் ளுரம்”(புறநா. 219 : 2) 14. கரிய பெரிய சுற்றத்தாருடன்ஒருங்குண்டு. 15. தங்கிச்செல். 16. கூழ் - பொருள்; “படைகுடி கூழமைச்சு”(குறள், 381) 18. உரை - புகழ். ஊர்க்குச் (18) செல்(15) (320)
|