75
மூத்தோர் மூத்தோர்க் கூற்ற முய்த்தெனப்
பாறர வந்த பழவிறற் றாயம்
எய்தின மாயி னெய்தினஞ் சிறப்பெனக்
குடிபுர விரக்குங் கூரி லாண்மைச்
5சிறியோன் பெறினது சிறந்தன்று மன்னே
மண்டமர்ப் பரிக்கு மதனுடை நோன்றாள்
விழுமியோன் பெறுகுவ னாயி னாழ்நீர்
அறுகய மருங்கிற் சிறுகோல் வெண்கிடை
என்றூழ் வாடுவறல் போல நன்றும்
10நொய்தா லம்ம தானே மையற்று
விசும்புற வோங்கிய வெண்குடை
முரசுகெழு வேந்த ரரசுகெழு திருவே.

(பி - ம்.) 1 ‘மூத்தோர்க்கூற்றமுய்த்தெனவுய்த்தென’7 ‘னாயிற் கழுநீர்’, ‘கழிநீர்’

திணை - அது; துறை - பொருண்மொழிக்காஞ்சி(பி - ம். பொது
மொழிக்காஞ்சி).

சோழன் நலங்கிள்ளி பாட்டு.

(இ - ள்.) தம் குடியின் முதியோரைமுதியோரைக் கூற்றம் கொண்டு போயிற்றாக, விதிதரப்பட்டுத் தம்பால்வந்த பழையவெற்றியால் உண்டாகியஅரசுரிமையைப் பெற்றேமானால் இத்தலைமையைப்பெற்றேமெனக்கொண்டுதம் குடிமக்களை இறைவேண்டியிரக்கும்,மிகுதியில்லாத ஆண்மையையுடைய உள்ளஞ்சிறியோன்பெறின், அத்தாயம் அவனுக்குப் பரிக்கவொண்ணாதாம்படிகனத்தது, மிகவும்; அடுத்துப்பொரும் போரைப் பொறுக்கும்மனவெழுச்சியை யுடைத்தாகிய வலிய முயற்சியையுடையசீரியோன் பெறுவனாயின், தாழ்ந்த நீரையுடைய வற்றியகயத்திடத்துச் சிறிய தண்டாகிய வெளிய கிடேச்சினதுகோடைக்கண் உலர்ந்த சுள்ளியைப்போலப் பெரிதும்நொய்து, குற்றமற்று விண்ணின் கண்ணே பொருந்த உயர்ந்தவெண்குடையினையும் முரசினையுமுடைய அரசரது அரசாட்சியைப்பொருந்திய செல்வம்-எ - று.

குடிபுரவிரக்குமென்பது, குடிமக்களைக்கொள்ளுங்கடமையன்றி மிகத்தர வேண்டுமென்று இரத்தலை.

தாயம் சிறியோன் பெறின், அதுமிகவும் சிறந்தன்று; வேந்தர் அரசு கெழுதிருவிழுமியோன் பெறுகுவனாயின், நன்றும் நொய்தாலெனக்கூட்டி வினைமுடிவுசெய்க.

மன்: ஆக்கத்தின்கண்வந்தது. அம்ம:அசைநிலை.


(கு - ரை.) 1. “எனக்குத்தாயாகியா ளென்னையீங் கிட்டுத், தனக்குத்தாய்நாடியே சென்றாள்” (நாலடி. 15)

2-3. தாயம் - உரிமை. “உருகெழு தாயமூழி னெய்தி” (பட்டினப். 227)

4-5. புரவு - காத்தல் : அஃது இறைக்குஆனமையின், ஆகுபெயர். கூர்-மிகுதி “வேலொடுநின்றா னிடுவென் றதுபோலும்கோலொடு நின்றா னிரவு”(குறள், 552)

8. அறுகயம் - நீரற்றகுளம். வெண்கிடை- வெளிய கிடேச்சு; வெளிய நெட்டி.

முனிவர் தெளிந்த பொருளைக் கூறினமையால்இது பொருண்மொழிக் காஞ்சியாயிற்று.

(75)