(கு - ரை.) 3. புறநா. 75 : 12. ‘முரசுகெழு தாயத் தரசோ தஞ்சமெனத்தஞ்சக்கிளவி அரசு கொடுத்தலெளிதென எண்மைப்பொருளுணர்த்தியவாறுகண்டுகொள்க’ (தொல். இடை. சூ. 18, சே: ந.; தெய்வச்.இ - வி. சூ. 271, உரை) 1-4. இவ்வடியிலுள்ள மொழிகளால்,சோழன் நலங்கிள்ளியின் மேம்பாடும் வீரமும் வண்மையும்விளங்குகின்றன; புறநா. 10 : 5 - 6 ஆம் அடிகளின்குறிப்புரையும், “தனாதுமேம் பாடுரைத்த றானொடுமொழி”,“தன்னுடை யாற்ற லுணரா ரிடையினும், தன்னை மறுதலைபழித்த காலையும், தன்னைப் புகழ்தலுந் தகும்”, “ஈயென்கிளவி யிழிந்தோன் கூற்றே”, “கொடுவென்கிளவியுயர்ந்தோன் கூற்றே” என்பவைகளும் இங்கே அறியற்பாலன. 7. இந்த அடியும்,“எழுப்புபவோ,துஞ்சு புலியைத் துயில்” (பழமொழி, 33) என்பதும்ஒரு பொருளன. 10. ‘அவண்’ என்றது பகைவருடைய இடத்தை. 9-11. புறநா. 80 : 7. “நெற்கொணெடுவெதிர்க் கணந்த யானை” (குறிஞ்சிப்.35); “சேயுயர் பணைமிசை யெழில் வேழம்” (பரி.1 : 4); “வார்முகின் முழக்கின் மழகளிறு மிகீஇத்தன்,கான்முளை மூங்கிற் கவர்கிளை போல, உய்தல்யாவதுநின் னுடற்றி யோரே” (பதிற். 84 : 11 - 3) 13-4. “முகைவாய்த்த முலைபாயக் குழைந்தநின்றார்”,“கூருகிர் சாடிய மார்புங் குழைந்தநின் றாரும்”,“சாயலின் மார்பிற் கமழ்தார் குழைத்தநின்......தடமென்றோள்” (கலித். 68 : 14, 91 : 11 - 2, 112: 23); “செழுந்தார் குழையைச் சேர்ந்தார்”, “புல்லி.......... குழைந்து தார் திவண்ட தன்றே” (சீவக.2034, 2062); பு. வெ. 317. 12-4. “அன்பின் விழையார் பொருள்விழையுமாய்தொடியார், இன்சொ லிழுக்குத் தரும்” (குறள்.911). ஒல்லாமுயக்கு : “வேளாமுயக்கம்” (கலித்.68) காமம்பற்றியும் பெருமிதம் பிறக்குமென்பதற்கு,‘பல்லிருங்கூந்தல்....தாரே’ என்பது மேற்கோள்; தொல்.மெய்ப்பாடு. சூ, 9, பேர். மு. காஞ்சித்திணையுள் இன்னதுபிழைப்பின் இதுவாகியரெனத் துன்னருஞ் சிறப்பின்வஞ்சினங்கூறியதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 24, ந. (73)
1 அவ்விடம் - பகைவரூர;் புறநா.78 : 9 - 12
|