(கு-ரை)1.மென்பால் - மருத நிலம். 2.வஞ்சிக்கோடு - ஒஞிசமரத்தின் கிளை. 4. வன்பால் - முல்லை நிலம் . 7. இருப்பைப்பூ உறைக்குந்து - இருப்பைப்பூ உதிரும்;" முள்ளரை யிலவத் தொள்ளிணர் வான்பூ... இரு நிலத் துறைக்கும் " (ஐங்குறு.320). 8.மண்டை - ஒருவகை உண்கலம் (வாணாய்). 9. கெடிற்றுமிசை - கெடிற்று மீனாகிய உணவு ; "அரிப்பறை வினைஞரல்குமிசைக் கூட்டும்" (ஐங்குறு.81); மிசை , மிசையெனவும் வழங்கும் ; "குறவர்க் கல்குமிசை வாகும்"(புறநா.236:2). 11. நெல்லும் பொன்னும் : “நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க” (ஐங்குறு. 1) ; “பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென்று” (பெருங்.1. 37 : 196) 12. கனற்ற - வெதுப்ப. 14. யான் தண்டவும் - யான் நீங்கவும் ; “தண்டாக் களிப்ப னாடுங்கூத்து” (மணி.6 : 126) 17. “நீர்நாண நெய்வழங்கியும்” (புறநா. 166 : 21) 19. என்ப : அசை. வறட்கு - வற்கடகாலத்தைத் தரும்பொருட்டு. 20. வெள்ளி யாண்டு நிற்க - மழைக்கோளாகிய சுக்கிரன் எங்கே நின்றாலென் ? புறநா. 383 : 24, 386 : 20 - 24. 22. நண்பல் - பல்லின்நடு. (384)
|