384
மென்பாலா னுடனணைஇ
வஞ்சிக்கோட் டுறங்குநாரை
அறைக்கரும்பின் பூவருந்தும்
வன்பாலாற் கருங்கால்வரகி
5........................
னங்கட் குறுமுயல் வெருவ வயல
கருங்கோட் டிருப்பைப் பூவுறைக் குந்து
விழவின் றாயினு முழவர் மண்டை
இருங்கெடிற்று மிசையொடு பூங்கள் வைகுந்து
10..................... துணையேம் பெரும
நெல்லென்னா பொன்னென்னா
கனற்றக்கொண்ட நறவென்னா
.......................மனையென்னா வவைபலவும்
யான்றண்டவுந் தான்றண்டான்
15நிணம்பெருத்த கொழுஞ்சோற்றிடை
மண்ணாணப் புகழ்வேட்டு
நீர்நாண நெய்வழங்கிப்
புரந்தோ னெந்தை யாமலநதொலை.....
அன்னோனை யுடையே மென்ப ......வறட்
20கியாண்டு நிற்க வெள்ளி மாண்ட
உண்ட நன்கலம் நெய்து நுடக்கவும்
தின்ற நண்ப லூண்டவும்
வந்த வைக லல்லது
சென்ற வெல்லைச் செலவறி யேனே.

(பி - ம்.) 'டுறவங்குநாரை' 3 'வாடைக்கரும்பின' , 'அடைக்கரும்பின' 4 'வனபாலாற்குக் கருங்' 8 'றாயுனுழவா' 10 'கிணையேம்' 11 'நெல்லென்னாம் பொன்னென்னாம்' 12'கன்னற்கொண்ட' 14 'யான்னண்டவுமதூண்டா' 18 'புநதெனந்தை' 22 'நன்பலூண்டோண்டவும்'

நிணையும் துறையும் அவை

கரும்பனூர்கிழானைப் புறத்திணை நன்னாகனார்.


(கு-ரை)1.மென்பால் - மருத நிலம்.

2.வஞ்சிக்கோடு - ஒஞிசமரத்தின் கிளை.

4. வன்பால் - முல்லை நிலம் .

7. இருப்பைப்பூ உறைக்குந்து - இருப்பைப்பூ உதிரும்;" முள்ளரை யிலவத் தொள்ளிணர் வான்பூ... இரு நிலத் துறைக்கும் " (ஐங்குறு.320).

8.மண்டை - ஒருவகை உண்கலம் (வாணாய்).

9. கெடிற்றுமிசை - கெடிற்று மீனாகிய உணவு ; "அரிப்பறை வினைஞரல்குமிசைக் கூட்டும்" (ஐங்குறு.81); மிசை , மிசையெனவும் வழங்கும் ; "குறவர்க் கல்குமிசை வாகும்"(புறநா.236:2).

11. நெல்லும் பொன்னும் : “நெற்பல பொலிக பொன்பெரிது சிறக்க” (ஐங்குறு. 1) ; “பொன்னு நெல்லும் புரிவின் வழங்குகென்று” (பெருங்.1. 37 : 196) 12. கனற்ற - வெதுப்ப.

14. யான் தண்டவும் - யான் நீங்கவும் ; “தண்டாக் களிப்ப னாடுங்கூத்து” (மணி.6 : 126)

17. “நீர்நாண நெய்வழங்கியும்” (புறநா. 166 : 21)

19. என்ப : அசை. வறட்கு - வற்கடகாலத்தைத் தரும்பொருட்டு.

20. வெள்ளி யாண்டு நிற்க - மழைக்கோளாகிய சுக்கிரன் எங்கே நின்றாலென் ? புறநா. 383 : 24, 386 : 20 - 24.

22. நண்பல் - பல்லின்நடு.

(384)