245
யாங்குப்பெரி தாயினு நோயள வெனைத்தே
உயிர்செகுக் கல்லா மதுகைத் தன்மையிற்
கள்ளி போகிய களரியம் பறந்தலை
வெள்ளிடைப் பொத்திய விளைவிற கீமத்
5தொள்ளழற் பள்ளிப் பாயல் சேர்த்தி
ஞாங்கர் மாய்ந்தனண் மடந்தை
இன்னும் வாழ்வ லென்னிதன் பண்பே.

திணையும் துறையும் அவை.

சேரமான் கோட்டம்பலத்துத்துஞ்சிய மாக்கோதை தன் பெருங்கோப்பெண்டுதுஞ்சிய காலைச் சொல்லிய பாட்டு.

(இ - ள்.) எப்படிப் பெரிதாயினும்யானுற்ற நோயினது எல்லை எவ்வளவாயிற்று, என்னுயிரைப்போக்கமாட்டாத வலியையுடைத்தல்லா மையால்?கள்ளி வளரப்பட்ட புறங்காட்டுள் வெள்ளிடையின்மூட்டிய தீயை விளைக்கும் சிறிய விறகையுடைய படுக்கையின்கண்ஒள்ளிய அழலாகிய பாயலின்கண்ணே பொருந்தப்பண்ணிமேலுலகத்தே போயினாள், மடவாள்; அவள் மாயவும் இன்னமும்உயிரிருந்துவாழ்வேன்; இவ்வுலகியற்கை இருந்தவாறுஎன்னோ! - எ - று.

எனைத்தென்றது, உயிரைப் போக்கமாட்டாமையின்நோயை இகழ்ந்து கூறியவாறு.

‘பாவை சேர்த்தி’ என்றோதிஅவளுடம்பை அழகுபடப் பள்ளியுட் கிடத்தியென்றுஉரைப்பாரும் உளர்.

உயிர் செகுக்கலாமைக்குக் காரணம்மதுகையுடைத்தல்லாமையென வுணர்க.

பாயல்சேர்த்தி இன்னும்வாழ்வலெனஇயையும்.

சேர்த்தவெனத் திரிப்பினும்அமையும்.

‘ஞாங்கர் மாய்ந்தனள்’ என்பதற்குஎன்னை நீத்து முன்னே இறந்தாளென்றுமாம்.


(கு - ரை.) 3. மு. புறநா. 225 : 7,237 : 13.

5. பள்ளிப்பாயல் - ஒருபொருட்பன்மொழி.

மு. ‘’கழல்சேர்ந்த தாள்விடலைகாதலிமெய் தீண்டும், அழல் சேர்ந்து தன்னெஞ் சயர்ந்தான்-குழல்சேர்ந்த,தாமந் தரியா தசையுந் தளிர்மேனி, ஈமந் தரிக்குமோவென்று” (தண்டி. சூ. 68, மேற்.)

காஞ்சித்திணைத்துறைகளுள், ‘காதலியிழந்ததபுதாரநிலை’ என்பதற்கு மேற்கோள்; தொல்.புறத்திணை. சூ. 19, இளம்.; சூ. 24, .

(245)