(கு - ரை.) 1. பத்தர் - யாழுறுப்பினுளொன்று. 4 - 5. புறநா. 69 : 3 - 4, குறிப்புரை: 138 : 5. 10. 'செய்த' என்பதன் குறிப்பாய் 'அன்ன'என்பது வந்ததற்கு மேற்கோள்; தொல். வினை. சூ.37, ந; இ. வி. சூ. 243, உரை. 13. கூளியர் என்பதற்குச் சேவித்துநிற்போர் என்று திருமுரு காற்றுப்படையிலும்,நாடுகாக்கும் வேடர் என்று மலைபடுகடாத்திலும், வேட்டுவர்என்று மதுரைக்காஞ்சியிலும் பொருள் செய்திருக்கின்றனர்நச்சினார்க்கினியர். "மகாஅ ரன்ன மந்தி" (சிறுபாண்.56); "கடும்பறைக் கோடியர் மகாஅ ரன்ன, நெடுங்கழைக்கொம்பர்க் கடுவனுகளினும்" (மலைபடு. 236 - 7) 11 - 4. "ஒப்போன் கூற்றென்றாரேனும்,சிறுபான்மை வலியாற் கொள்ளுமிடத்தும் தாவென்பதுவருமெனக் கொள்க; 'நின்னது....ஒன்றென்கோ'எனவரும்" (தொல், எச்ச. சூ. 50, ந.) 21 - 2. புறநா. 134 : 1 - 2,குறிப்புரை. 23 : 4. புறநா. 140 : 6 - 8. 25. இச்செய்யுளைப் பாடிய புலவர் துறையூரினராதலின்அவ்வூர்த் துறைமணலைக் கூறினர். (136)
1 "வறியார்க்கொன் றீவதேயீகைமற் றெல்லாம், குறியெதிர்ப்பை நீர துடைத்து"(குறள்,221) 2 " இரப்பவ ரென்பெறினுங் கொள்வர்கொடுப்பவர், தாமறிவர் தங் கொடையின் சீர்"(ஒளவையார் பாடல்) 3 புறநா. 9 : 8 - 11. குறிப்புரை; 55 : 17 - 21, குறிப்புரை
|