(கு - ரை.) 1. “மைந்தநீ கோடியெங்கள் வாழ்க்கைநாள் யாவு மென்பார்” (கம்ப.கைகேசிசூழ்வினை. 88) பண்ணன் : புறநா. 70 : 13, 181 : 6, 388: 10. வாழிய : வாழ்த்துதற் பொருண்மைக்கண்வந்த யகரவீற்று வியங்கோள் வினைமுற்றிற்கு மேற்கோள்;நன். சூ. 337, மயிலை; இ. வி. சூ. 239, உரை. 4. ஊணொலியரவம் : புறநா. 334 : 7;மணி. 17 : 97; “முட்டாது நடாஅ மட்டூண் கம்பலும்”(பெருங். 2. 2 : 87); “அட்டூண் டுழனி” (நன்.சூ. 211, சங்கர. மேற்.) 3 - 4. புறநா. 47 : 1, 370 : 11. 5 - 7. கருத்து : ‘இனித் தெளிவு என்பது,எறும்பு முட்டை கொண்டு தெற்றியேறின் மழை பெய்ததுமழை பெய்யு மென்பது’ (தொல். வினை. சூ. 45, இளம்.);‘எறும்பு முட்டைகொண்டு தெற்றியேறின் மழைபெய்தல்நூலாற்றெளிந்தான் அவை முட்டைகொண்டு தெற்றி யேறியவழி,மழை பெய்யாமுன்னும் மழை பெய்தது, மழை பெய்யும் என்னும்;ஆண்டு எதிர்காலத்திற்குரிய பொருள் இறந்தகாலத்தானும்நிகழ்காலத்தானும் தோன்றியவாறு கண்டுகொள்க’,‘எறும்பு முட்டைகொண்டு திட்டை யேறியது கண்டுழிமழை பெய்வதாமென்னாது மழைபெய்தது பெய்கின்றதெனக்கூறுதல் தெளிவு’ (தொல். வினை. சூ. 48, சே; கல்;ந; நன். சூ. 383, மயிலை; நன். வி. சூ. 384) 11. “பசிப்பிணி யென்னும் பாவியதுதீர்த்தோர், இசைச்சொலளவைக் கென்னா நிமிராது”,“பசிப்பிணி மருந்து” (மணி. 11 : 80, 81, 28 : 217) 12. வினைக்குறிப்புச்சொல்,பிறிதின் கிழமையாகிய உடைமைப் பொருள்பட நிற்றற்குமேற்கோள்; தொல். வினை. சூ. 23, சேகல்; ந. (173)
|