(கு - ரை.) 1. அறவைநெஞ்சம் - அறத்தையுடைய நெஞ்சம் ; “அறவை யாய ரகன்றெரு வடைந்தன” (சிலப். 22 : 116) ; ‘அறவை நெஞ்சத்தாயர்’ என்பதை, “ஆகாத் தோம்பி யாப்பய னளிக்கும், கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை” (சிலப்.15 : 120 - 21) என்பது விளக்குகின்றது. 1 - 2. புறநா. 44 : 11 - 3. செருந்தி - ஒரு பூமரம். 5. ஆர்வலர் - பரிசிலர். காவலர் - அரசர். 6. கடி - காவல். 5 - 6. “புலிதுஞ்சு வியன்புலத் தற்றே, வலிதுஞ்சு தடக்கை யவனுடை நாடே” (புறநா. 54 : 13 - 4) 7. சிலம்ப - முழங்க ; முழக்கம் : இங்கே எதிரொலி. 10. சென்றஞான்று - முதல்நாள். 12. அளியன் - அளிக்கத்தக்கான். 14. “ஊருண் கேணிப் பகட்டிலைப் பாசி, வேர்புரை சிதாஅர் நீக்கி” (புறநா. 392 : 13 - 4) ; “பாசி வேரின் மாசொடு குறைந்த, துன்னற் சிதாஅர் நீக்கி” (பொருந. 153 - 4) ; “பாசி யன்ன சிதர்வை நீக்கி” (பெரும்பாண். 468) 15. மலரென்றது பகன்றைப்பூவை ; புறநா. 393 : 17 - 8, குறிப்புரை. 17. துவை - துவையல். 18. வெள்ளிக்கலம் : பெரும்பாண்.477 - 80, ந. 19. முன்னூர் - ஊர்முன். பொதியில் - அம்பலம். 20. “இரும்பே ரொக்கல் பெரும்புலம் புறினும்” (புறநா. 394 ; 16) 21. அகடுநனை - உள்ளிடம் நனைந்த. வேங்கைவீ - வேங்கை மரத்துப்பூ. 22. பகடுதரு செந்நெல் - எருது முதலியவைகள் உழுதுண்டாக்கிய செவ்விய நெல் ; “பகடுதருபெருவளம் வாழ்த்தி” (புறநா. 391 ; 4) ; “பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க” (நாலடி. 2) 21 - 2. மலைபடு. 434 - 5. 23. கொண்டி - பொருளின் மிகுதி ; புறநா. 382 : 1. 27. வான் - மேகம். (390)
|