எல்லைக்கண் நின்றார்-நட்புவரம்பு கடவாது. அதன் எல்லைக்குள் நிலைத்து நின்றவர்; தொல்லைக்கண் நின்றார் தொடர்பு-பழைமையைத் தம்மோடு பழகிவந்து துன்பில் திரியாது நின்றவரின் நட்பை; தொலைவிடத்தும் துறவார்-அவரால் தமக்குக் கேடுவந்தவிடத்தும் விடார். 'தொல்லை' ஆகுபொருளி, 'தொலைவு' பொருட்கேடும் போர்த்தோல்வியும்.
|