அழுக்கற்று அகன்றாரும் இல்லை-பொறாமைப் பட்டுப் பெரியவராயினாருமில்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அக்குணமில்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாருமில்லை.
இது பழவினையால் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது.