அழுக்கற் றகன்றாரு மில்லையஃ தில்லார்
பெருக்கத்திற் றீர்ந்தாரு மில்.

 

அழுக்கற்று அகன்றாரும் இல்லை-பொறாமைப் பட்டுப் பெரியவராயினாருமில்லை; அஃது இல்லார் பெருக்கத்தின் தீர்ந்தாரும் இல்-அக்குணமில்லாதவர் பேராக்கத்தினின்று நீங்கினாருமில்லை.

இது பழவினையால் தாக்குண்ணாத பிறப்பின் நிலைமையைக் கூறுவது.