1215 துஞ்சுங்காற் றோண்மேல ராகி விழிக்குங்கால் நெஞ்சத்த ராவர் விரைந்து. காதலர் உறங்குங்காலத்துத் தோள்மேலராகி விழித்தகாலத்து விரைந்து மனத்தின்கண்ணே புகுவர். இஃது உறக்கம் நீங்கினால் யாண்டுப் போவரென்று நகைக் குறிப்பினாற் கூறிய தோழிக்குத் தலைமகள் கூறியது. 5 1216 நனவினா னல்காக் கொடியார் கனவினான் என்னெம்மைப் பீழிப் பது. நனவின்கண் அருளாத கொடுமையையுடையார் கனவின்கண் வந்து எம்மைத் துன்பம் உறுத்துவது எற்றுக்கு? இது விழித்த தலைமகள் ஆற்றாமையால் தோழிக்குக் கூறியது. 6 1217 நனவினா னல்காரை நோவர் கனவினாற் காதலர்க் காணா தவர். நனவின்கண் வந்து காதலரை நோவாநிற்பர், கனவின்கண் அவரைக் காணாதவர்: காண்பாராயின், நோவார். இது தலைமகள் ஆற்றாமை கண்டு தலைமகனை யியற்பழித்த தோழிக்கு அயலார்மேல் வைத்துத் தலைமகள் கூறியது. 7 1218 நனவினால் நம்நீத்தா ரென்பர் கனவினாற் காணார்கொ லிவ்வூ ரவர். இவ்வூரார் நனவின்கண்ணே நம்மை நீக்கியகன்றா ரென்று அவரைக் கொடுமை கூறாநிற்பர்: அவர் அவரைக் கனவின்கண் காணார்களோ? இஃது இவ்வேறுபாடு அலராயிற்று என்ற தோழிக்குத் தலைமகள் கூறியது. 8 |