1226 புன்கண்ணை வாழி மருண்மாலை எங்கேள்போல் வன்கண்ண தோநின் றுணை. மயங்கிய மாலைப்பொழுதே! நீ வாழ்வாயாக; புன்கண்மையை யுடையையாயிருந்தாய்; எம்முடைய கேளிரைப் போல வன்கண்மையை யுடைத்தோ நின்துணையும். இது தன்னுட்கையாறெய்திடு கிளவி. 6 1227 காலை யரும்பிப் பகலெல்லாம் போதாகி மாலை மலருமிந் நோய். இக்காம நோயாகிய பூ விடியற்காலத்தே அரும்பிப் பகற்பொழுதெல்லாம் முகிழ் முகிழ்த்து மாலைக்காலத்தே மலரா நின்றது. 7 1228 காதல ரில்வழி மாலை கொலைக்களத் தேதிலர் போல வரும். காதரில்லாதவிடத்து இம்மாலைப்பொழுது கொலைக் களத்துப் பகைவரைப்போல வரும். இது மாலைக்காலத்து நோய் மிகுதற்குக் காரணமென்னை யென்ற தோழிக்குத் தலைமகள் காரணங்கூறியது. 8 1229 பதிமருண்டு பைத லுழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து. என்மதி நிலைகலங்க மயக்கத்தை யுடைத்தாகிய மாலைக்காலம் வரும்பொழுது இப்பதியெல்லாம் மயங்கித் துன்பமுறாநிற்கும். மதி - மானம் 9
|