1258 நிணந்தீயி லிட்டன்ன நெஞ்சினார்க் குண்டோ புணர்ந்தூடி நிற்போ மெனல். தீயின்கண்ணே நிணத்தையிட்டாற்போல, உருகும் நெஞ்சினை யுடையார்க்குக் காதலரை யெதிர்ப்பட்டு வந்து ஊடி நிற்போமென்று நினைத்தல் உளதாகுமோ? 8 1259 புலப்ப லெனச்சென்றேன் புல்லினே னெஞ்சங் கலத்த லுறுவது கண்டு. புலப்பலெனச் சென்ற யான் முயங்கினேன்: நெஞ்சு முற்பட்டுப் பொருந்துதல் உறுவதனைக் கண்டு. இஃது கூடுதல் தீமையென்ற தோழிக்கு முன்னொருகால் அவனைப் பிரிந்து கூடிய என்மனம் செய்தது இதுவென்று தலைமகள் கூறியது. 9 1260 நாணென வொன்றோ வறியலர் காமத்தாற் பேணியார் பெட்பச் செயின். நாணென்பதொன்று அறியார் மகளிர், காமம் காரணமாக விரும்பப்பட்டவர் தாம் விரும்புமாறு செய்வாராயின். அவர் விரும்புமாறு செய்வாராயின் நாணமுண்டாகா தென்றவாறு 10 127. அவர்வயின்விதும்பல் அவர்வயின்விதும்பலாவது அவர் வரவின் கண்ணே விரைதல்; காதலர் வரவு கேட்டிருத்தல் என்றவாறு. இவையெல்லாம் தோழிக்குக் கூறினவாகக் கொள்ளப்படும். நிறையழிந்தார் அப்பொழுது காதலர் வரவிற்கு ஆசையுற்றிருப்பார் ஆதலான், அதன் பின் இது கூறப்பட்டது. 1261 வருகமற் கொண்க னொருநாட் பருகுவன் பைதனோய் யெல்லாம் கெட. கொண்கன் ஒருநாள் வருவானாக வேண்டும்: வந்தானாகில் என் பசலைநோயெல்லாங் கெடப் பருகுவேன். இது வரவு வேட்கையாற் கூறியது. 1 |