பக்கம் எண் :

319

1278 தொடிநோக்கி மென்றோளும் நோக்கி யடிநோக்கி
அஃதாண் டவள்செய் தது.

தொடியையும் நோக்கி, மெல்லிய தோளினையும் நோக்கி, அடியையும் நோக்கி, அவள் அவ்விடத்துச் சென்ற குறிப்பு அதுவாயிருந்தது.

அது - உடன்போக்கு.

8

1279 நெருநற்றுச் சென்றாரெங் காதலர் யாமு
மெழுநாளேம் மேனி பசந்து.

எமது காதலர் பிரிந்து நெருநற்றுச் சென்றார், யாமும் மேனி பசந்து ஏழுநாளுடையமாயினேம்.

இஃது அவர் பிரிவதன் முன்னும் பிரிவரென் றேங்கி இன்புற்றிலமென்று தலைமகள் கூறியது.

9

1280 கரப்பினுங் கையிகந் தொல்லாநின் னுண்க
ணுரைக்க லுறுவதொன் றுண்டு.

நீ சொல்லாது மறைத்தாயாயினும் அதற்குடம்படாதே நின்னைக் கைகடந்து நின்னுண்கண்களே எனக்குச் சொல்லலுறுவதொரு காரியமுண்டாயிராநின்றது: இனியதனை நீயே தெளியச் சொல்வாயாக. 1

10

129. புணர்ச்சி விதும்பல்

புணர்ச்சி விதும்பலாவது பிரிந்து கூடின தலைமகனும் தலைமகளும் புணர்தல் வேண்டி ஒருவரின் ஒருவர் முந்து முந்து விரைதல்.


1. இது பரிமேலழகர் உரை.