1322 ஊடலிற் றோற்றவர் வென்றா ரதுமன்னுங் கூடலிற் காணப் படும். ஊடலின்கண் எதிராது சாய்ந்தவர் வென்றார்: அவ்வெற்றியை நிலைபெறாநின்ற கூடலின்கண்ணே காணலாகும். 2 1323 உணலினு முண்ட தறலினிது காமம் புணர்தலி னூட லினிது. உண்பதினும் உண்டது அறுதல் உடம்பிற்கு இன்பமாம்: அதுபோலக் காமத்திற்குப் புணர்தலினும் ஊடுதல் இன்பமாம். பசியினால் உண்ணும் உணவு இன்பந்தருவது போல ஊடலினால் கூடல் இன்பந் தரும் என்றவாறு. 3 1324 ஊடுதல் காமத்திற் கின்பம் அதற்கின்பங் கூடி முயங்கப் பெறின். காமத்திற்கு ஊடுதல் இன்பமாம்: அதன்பின் கூடிக்கலக்கப் பெற்றால் அதற்கு இன்பமாம். இது யாம் பெற்றோம்; பிறர் அதன் செவ்வியறியாமையால் பெறுதலரிதென்று கூறியது. 4 1325 ஊடலிற் றோன்றுஞ் சிறுதுனி நல்லளி வாடினும் பாடு பெறும். ஊடலிற் றோன்றும் சிறியதுனி, மிக்க அருள் பெறாதொழியினும் அழகு உடைத்து. புணராதொழியினும் இன்பமாமென்று கூறியவாறு. 5 |