பக்கம் எண் :

99

403 கல்லா தவரும் நனிநல்லர் கற்றார்முற்
சொல்லா திருக்கப் பெறின்.

கல்லாதவரும் ஓரிடத்து மிகவும் நல்லவராவர், கற்றவர் முன்பு உரையாடாதிருக்கக்கூடுமாயின்.

சொல்லாதொழிய அறிவாரில்லையாவர் என்றவாறாயிற்று. இது கல்லாதார்க்கு உபாயம் இது என்றது.

3

404 கல்லாதா னொட்பங் கழியநன் றாயினும்
கொள்ளார் ரறிவுடை யார்.

கல்லாதானது ஒண்மை மிகவும் நன்றாயிருப்பினும் அதனை ஒண்மையாகக் கொள்ளார் அறிவுடையார்.

ஒண்மை யெனினும் அறிவெனினும் அமையும். இது கல்லாதார் ஒள்ளியாராயினும் மதிக்கப்படாரென்றது.

4

405 கல்லா வொருவன் றகைமை தலைப்பெய்து
சொல்லாடச் சோர்வு படும்.

கல்லாத ஒருவனது பெருமை கற்றவன் கிட்டி உரையாட மறையும்.

இது பெருமையுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

5

406 மேல்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்துங்
கற்றா ரனைத்திலர் பாடு.

கல்வியில்லாதார் உயர்குலத்திற் பிறந்தாராயினும், இழிகுலத்துப் பிறந்தும் கற்றாரோடு ஒத்த பெருமையிலர்.

இது குலமுடையாராயினும் மதிக்கப்படாரென்றது.

6

407 நுண்மா ணுழைபுல மில்லா னெழில்நலம்
மண்மாண் புனைபாவை யற்று.

நுண்ணிதாகிய மாட்சிமைப்பட்ட ஆராய்ச்சியையுடைய கல்வியில்லாதான் அழகு, மண்ணினாலே நன்றாகச் செய்த பாவையின் அழகினை யொக்கும்.

இஃது அழகியராயினும் மதிக்கப்படாரென்றது.

7