நச்சப்படாதவன் செல்வம் - வறியவர்க்கு அருகிலிருந்தும் ஒன்றுங் கொடாமையின் அவரால் விரும்பப்படாதவன் செல்வ முடையவனாயிருத்தல்; நடு ஊருள் நச்சு மரம் பழுத்த அற்று- ஊர் நடுவில் எட்டி மரம் பழுத்தாற் போலும். இரண்டும் அருகிலிருந்தும் பயனில்லை யென்பதாம். ' நடுவூர்' என்பது ' புறநகர் ' என்பது போன்ற இலக்கணப் போலி.
|