கரப்பு இடும்பை இல்லாரைக் காணின்-தம்மிடத்துள்ளதைக் கரத்தலாகிய நோயில்லாதவரைக் கண்டால்; நிரப்பு இடும்பை எல்லாம் ஒருங்கு கெடும்-தன்மானத்தை விடாது இரப்போருக்கு வறுமையால் வருந்துன்பமெல்லாம் ஒருசேரத் தொலையும். கரத்தல் மறுமை யின்பத்திற் கேதுவான மன நலத்தைக் கெடுத்தலால், அதை நோய் என்றார், நோய் இடும்பைவகைகளுள் ஒன்றாதலின், இடும்பை இங்குநோய் எனப்பட்டது, கரவாதவரைக் கண்டமட்டில் மகிழ்ச்சி பொங்குதலால் ’எல்லாம் ஒருங்கு கெடும்.’ என்றார். காலிங்கர் ’முழுதுங் கெடும்’ என்னும் பாடங் கொள்வர்.
|