துன்பத்துள் துப்பு ஆயார் நட்புத் துறவற்க-துன்பக் காலத்தில் தனக்குப் பற்றுக்கோடானவரின் நட்பை விடாதிருக்க; மாசு அற்றார் கேண்மை மறவற்க-மனத்திற் குற்றமற்றவரது உறவை மறவாதிருக்க.
மாசற்றார் கேண்மை இம்மைக்கும் மறுமைக்கும் பலவகையில் உதவும் என்பது கருத்து.