நன்றி மறப்பது நன்று அன்று-ஒருவர் செய்த நன்மையை மறப்பது அறனன்று; நன்றல்லது அன்றே மறப்பது நன்று-அவர் செய்த தீமையை அன்றே மறப்பது அறனாவது. நன்றி மறப்பதென்பது மறந்து ஈடான நன்மை செய்யாமையும் தீமை செய்தலுமாம். நன்றல்லது மறப்பதென்பது மறந்து எதிர்த் தீமை செய்யாமையும் நன்மை செய்தலுமாம்.
|