( இதுவுமது ) மதி - வெண்ணிலாவே ! மாதர் முகம்போல் ஒளிவிட வல்லையேல் - இப்பெண்ணின் முகம்போலத் தேய்தல் வளர்தலின்றியும் களங்கமின்றியும் என்றும் ஒரு தன்மைத்தாய் விளங்க உனக்கு இயலுமாயின் ; வாழி - நீ நீடு வாழ்வாயாக ! ; காதலை - அன்று நீயும் என் காதலையுடையையா யிருப்பாய். நீ அங்ஙனம் விளங்கமாட்டாயாதலின் , என் வாழ்த்திற்கும் காதற்கும் உரியை யல்லை யென்பதாம் .
|