இனன் இல்லா ஊர் வாழ்தல் இன்னாது- மகளிர்க்குக் குறிப்பறிந் துதவும் உறவினர் போன்ற தோழியர் இல்லாத வேற்றூரில் வாழ்தல் துன்பந்தருவதாம்; இனியார்ப் பிரிவு அதனினும் இன்னாது- இனி, தமக்கு இனிய காதலரை விட்டுப் பிரிவதோ, அதனினும் மிகத் துன்பந் தருவதாம். தலைவனைச் செலவழுங்குவியாது செலவுடம்பட்டு வந்தமை பற்றித் தோழியொடு புலக்கின்றாளாதலின், 'இனனில்லூர்' என்றாள். இருவகைத் துன்பமுந் தனக்குண்மையை உலகியல்மேல் வைத்துக் கூறியவாறு.
|