பக்கம் எண் :

இன்பத்துப் பால்
கற்பியல்

அதிகாரம் 117. படர்மெலிந்திரங்கல்

அஃதாவது , பிரிவாற்றாளாகிய தலைமகள் , தானுறுகின்ற துன்பத்தை இடைவிடாது நினைத்துக் கொண்டிருத்தலால் வருந்துதல் , படர்தல் - உள்ளுதல் .

'படரே யுள்ளல் செலவு மாகும்.'

(தொல்.உரி.42)

 

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை யிறைப்பவர்க்
கூற்றுநீர் போல் மிகும்.

 

(காமநோயை வெளிப்படுத்தல் நின் நாணுக்குந் தகாதென்ற தோழிக்குச் சொல்லியது.)

நோயை யான் மறைப்பேன் - இக்காம நோயைப் பிறர் அறியாவாறு யான் மறைப்பேன்; இஃதோ இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும் - ஆயின் , இதுவோ நான் மறைக்க மறைக்க என் நாண்வரை நில்லாது இறைப்பவர் இறைக்க இறைக்க வூறும் ஊற்று நீர்போல மிகுந்து வெளிப்படும்.

இனி அதற்குத் தக்கது நீ செய்தல் வேண்டும் என்பதாம். 'இஃதோ' என்பது சுட்டுப்பெயர் ஈது திரிந்தது அன்று. மறைத்து என்ன பயன் என்பது பட நின்றமையின் 'மன்' ஒழியிசை. 'இஃதோர் நோயை' என்னும் பாடம் சரியானதன்று.