(காமத்தால் இன்பம் நுகர்ந்தவர் அதனால் வருந்துன்பத்தையும் பொறுத்தல் வேண்டுமென்ற தோழிக்குச் சொல்லியது.) காமம் இன்பம் கடல் - காமம் புணர்வால் இன்பஞ் செய்யும்போது , அவ்வின்பம் கடல்போற் பெரிதாம்; மற்று அஃது அடுங்கால் துன்பம் அதனிற் பெரிது - பின்பு அதுதானே பிரிவால் துன்பஞ் செய்யும்பொழுது , அத்துன்பம் அக்கடலினும் பெரிதாம். காமத்தால் வரும் இன்பமுந் துன்பமும் அளவொத்திருப்பின் ஆற்றலாம் . துன்பம் இன்பத்தினும் மிகுத்திருப்பதால் ஆற்றுமாறில்லை யென்பதாம். 'மற்று' வினைமாற்று அல்லது பின்மைப் பொருளில் வந்த்து. 'அடுங்கால் ' என்று பின்றொடரில் வந்தமையால் , அதன் மறுதலை யெச்சம் முன்றொடர்க்கு வருவிக்கப்பட்டது.
|