(அவர்மேற் காதலுடைமையின் அவர் கருத்தறிந்தாற்றினாய் என்ற தோழிக்குச் சொல்லியது.) நாம் காதல் கொண்டார்-நம்மாற் காதல் செய்யப்பட்டவர் ;தாம் காதல் கொள்ளாக்கடை-அவ்வாறே தாமும் நம்மிடத்துக் காதல் செய்யாவிடத்து ; நமக்கு எவன் செய்ப-நமக்கு என்ன இன்பத்தைச் செய்வர்? அக்காதலால் நாம் பெற்றது துன்பமே யென்பதாம். எச்சவும்மை தொக்கது. 'ஓ' அசைநிலை
|