பக்கம் எண் :

பெறாஅமை யஞ்சும் பெறிற்பிரி வஞ்சு
மறாஅ விடும்பைத்தென் நெஞ்சு.

 

(வாயிலாகச் சென்ற தோழிகேட்பத் தலைமகள் சொல்லியது.)

பெறாமை அஞ்சும்-காதலரைப் பெறாதபோது அப்பெறாமைக்கு அஞ்சுகின்றது ; பெறின் பிரிவு அஞ்சும்-பெற்றபோதோ எதிர்காலத்தில் நேரக் கூடிய பிரிவைக் கருதிக்கொண்டு அதற்கு அஞ்சுகின்றது;என் நெஞ்சு அறா இடும்பைத்து- இங்ஙனம் என் உள்ளம் தீராத துன்பத்தையுடையதா யிருக்கின்றது.

பெறாதபோது கலவியின்மை பற்றியும் பெற்றபோது கலவிதொடராமை பற்றியும் அச்சம் உண்டாவதால் , என் வாழ்க்கை எப்போதும் துன்பவாழ்க்கையே என்பதாம். அஞ்சுதல் அஞ்சி வருந்துதல் , ' பெறாஅமை,' அறாஅ இசைநிறை யளபெடைகள்.