பக்கம் எண் :

பொருடீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருடீர்ந்த
மாசறு காட்சி யவர்.

 

மருள் தீரந்த மாசு அறு காட்சியவர் - மயக்கத்தினின்று நீங்கிய குற்ற மற்ற அறிவுடையார்; பொருள் தீர்ந்த பொச்சாந்தும் சொல்லார் -பயனில்லாத சொற்களை மறந்துஞ் சொல்லார்.

மயக்கம் ஐயமுந் திரிபும். குற்ற மற்ற அறிவு மெய்யறிவு அல்லது தூய அறிவு.