அறத்துப் பால் இல்லறவியல் அதிகாரம் 21. தீவினையச்சம்அஃதாவது, இம்மையிலும் மறுமையிலும் துன்பம் விளைவிக்கும் தீவினைகட்கு அஞ்சி அவற்றைச் செய்யாதிருத்தல். பயனில் சொல்லையும் தீச்சொல் என விலக்கியமையால், தீவினை விலக்கப்பட்டமை சொல்லாமலே பெறப்படும். முக்கரணத்துட் சொல்லிற் கடுத்தது செயலாலாமதலால், இது பயனில சொல்லாமையின் பின் வைக்கப்பட்டது. தீச்சொல்லினும் தீச்செயல் கொடியது என்னாது தீவினையச்சம் என்றார்.
|