இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - கொத்தான நாவுகளுள்ள பெருந்தீ வந்து சுட்டாற் போன்ற தீங்குகளை ஒருவன் தொடர்ந்து செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று- அவனைச் சினவாமை கூடுமாயின் நன்றாம். தீமையின் மிகுதி தோன்ற 'இணரெரி' என்றும் தீவினைப்பன்மை தோன்ற 'இன்னா' என்றும் முற்றத்துறந்தவரும் பொறுத்தலருமை தோன்றப் 'புணரின்' என்றுங் கூறினார். சினத்தீ கனல் தீயினுங் கொடிது என்பது கருத்து.
|