உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின்- தவஞ் செய்வான் தன் மனத்தாற் சினத்தை ஒருபோதுங் கருதானெனின்; உள்ளியது எல்லாம் உடன் எய்தும்- அவன் பெறக்கருதிய பேற்றையெல்லாம் ஒருங்கே பெறுவான். 'உள்ளத்தால்' என்னும் மிகைச்சொல் அருள்பயின்ற வுள்ளம் என்பதை யுணர்த்தும். இம்மை மறுமை வீடென்னும் மூன்றும் அடங்க "உள்ளிய தெல்லாம்" என்றார். சினம் கருத்து வடிவில் இல்லையெனின் சொற்செயல் வடிவிலும் இராதென்பது கருத்து.
|