பொருட்பால் அரசியல் அதிகாரம் 46. சிற்றினஞ் சேராமைஅஃதாவது சிறியோர் கூட்டத்தொடு கூடாமை. சிறியோராவார், கயவரும் ஐங்குற்றவாளியரும் (காமுகரும் கட்குடியரும் கவறாடுவோரும் கரவடரும் கொலைஞரும்) தன்னலக்காரரும் கல்வி நிரம்பாதவரும் உயர்ந்தோர் உண்டென்பதை இல்லையென மறுப்போருமாவர். சிறியோர் சேர்க்கையால் அறிவும் ஒழுக்கமும்திரிந்து இம்மையும் மறுமையுங் கெடுவதால், பெரியார்துணை இல்லாதுபோகு மென்பதையும், இருப்பினும் பயன்படா தென்பதையும் , உணர்த்தற்கு இது பெரியாரைத் துணைக்கோடல் என்பதன் பின் வைக்கப்பட்டது. |