இடன் அறிந்து போற்றி - தக்க இடத்தைத்தெரிந்து தம்மைக் காத்துக் கொண்டு , போற்றார்கண் செயின் - பகைவரொடு போர்வினை செய்வராயின் ; ஆற்றாரும் ஆற்றி அடுப - வலிமையில்லாதவரும் வலிமையராகி வெல்வர் . தம்மைக் காத்தல் , பகைவரால் , துன்பம் தோல்வி கேடுகள் வராமல் அரணாலும் படையாலும் தம்மைக் காத்துக் கொள்ளுதல் . தம்மை என்பதும் போர்வினை என்பதும் அவாய் நிலையான் வந்தன . உம்மை இழிவு சிறப்பு .
|