செய்வானை நாடி - செய்வானது தன்மையை முதற்கண் ஆராய்ந்து ; வினைநாடி - பின்பு அவனாற் செய்யப்படும் செயலின் தன்மையை ஆராய்ந்து ; காலத்தோடு எய்த உணர்ந்து - அதன்பின் அவன் தன்மையும் அவன் செயலின் தன்மையும் காலத்தொடு பொருந்துமா றறிந்து ; செயல் - அவை பொருந்து மாயின் அவனை அவ்வினையின்கண் அரசன் ஆளுதலைச் செய்க. செய்வானது இலக்கணம் இவ்வதிகாரத்தின் முதல் முக்குறள்களிலும், வினையின் இயல்பு இதற்கு முந்திய குறளிலும், கூறப்பட்டன . காலத்தோடெய்தவுணர்த லாவது , இத்தன்மையன் இவ்வினையை இக்காலத்து இவ்வகையிற் செய்யின் இவ்வாறு முடியும் என்று கூட்டி நோக்கி உய்த்துணர்தல்.
|