காக்கை கரவா கரைந்து உண்ணும் - காகங்கள் தமக்கு இரையான பொருள் கண்டவிடத்து அதனை மறையாது தம் இனத்தைக் கரைந்தழைத்து அதனொடு கூடவுண்ணும் ; ஆக்கமும் அன்ன நீரார்க்கே உள - சுற்றத்தோடு கூடி நுகருஞ் செல்வங்களும் அத்தன்மையார்க்கே உண்டாம். சுற்றத்தோடு நுகருஞ் செல்வங்கள் பேரளவின; பல்வகையின; பொதுவுடைமை போல்வன . காக்கைத் தன்மைகள் அன்பு , ஒற்றுமை , கூட்டுறவு முதலியன . 'காக்கை', 'ஆக்கம்', பால்பகா வஃறிணைப் பெயர்கள். ஏகாரம் பிரிநிலை.
|