ஆக்கம்-செல்வம்; அசைவு இலா ஊக்கம் உடையான் உழை-தளர்வில்லாத ஊக்க முள்ளவனிடத்திற்கு; அதர்வினாய்ச் செல்லும்- தானாகவே வழி வினவிக்கொண்டு செல்லும். ஊக்க முள்ளவனுக்கு ஆக்கம் எளிதாய்க்கிட்டும் என்பது கருத்து. அசைவின்மை இடுக்கண், மெய்வருத்தம் முதலிய வற்றால் தளராமை. இந்நான்கு குறளாலும், இருக்கின்ற செல்வத்தினும் அதற்கு ஏதுவான ஊக்கம் சிறந்த தென்பது கூறப்பட்டது.
|