வெள்ளத்து அனைய இடும்பை -வெள்ளம்போல் ஏராளமாக வந்த துன்பங்களெல்லாம்; அறிவுடையான் உள்ளத்தின் உள்ளக் கெடும் -அறிவுடையவன் அவற்றால் ஒன்று மில்லை யென்று தன் மனத்தில் நினைத்த மட்டில் நீங்கி விடும். இன்பமுந் துன்பமும் அவரவர் எண்ணத்தைப் பொறுத்தனவென்றும், ஒரு துன்பத்தை இன்பமென்றெண்ணின் அதனால் ஒரு தொல்லையுமில்லை யென்றும், உண்மை யறிந்தவனை 'அறிவுடையான்' என்றும், அவன் துன்பத்தை வெல்லும் விரகு (உபாயம்)ஒரு நொடிநேர நினைவே யென்பார் 'உள்ளக்கெடும்' என்றும், கூறினார்.
|