அன்பு-தம் அரசனிடத்து அன்புடைமையும்; அறிவு-தம் வினைக்கு அறிய வேண்டியவற்றை அறிந்திருத்தலும்; ஆராய்ந்த சொல் வன்மை-செவிக்கும் உள்ளத்திற்கும் இனியனவும் பொருட் கொழுமையுள்ளனவும் தகுந்தனவுமான சொற்களை ஆராய்ந்தமைத்துக் கூறும் நாவன்மையும்; தூது உரைப்பார்க்கு இன்றியமையாத மூன்று-தூது சொல்வார்க்கு இன்றியமையாத மூன்று திறங்களாம். 'இன்றியமையாத முன்று, எனவே, முன்பு அமைச்சர்க்குக்கூறப் பட்ட பிறவிலக்கணங்களும் வேண்டு மென்பது பெறப்பட்டது.
|