அறிவு-இயற்கையான அறிவும்; உரு-கண்டார் மதிக்குந் தோற்றப் பொலிவும்; ஆராய்ந்த கல்வி-ஆராய்ச்சியோடு கூடிய கல்வியும்; இம் மூன்றன் செறிவு உடையான்-ஆகிய இம் முன்றும் நிறைந்தவன்; வினைக்குச் செல்க-வேற்றரசரிடம் தூதனாகச் செல்க. இம் மூன்றும் நிறைந்தவன் செல்லின், தூதுவினை சிறப்பாக முடியுமென்பது கருத்து. பல நூல்களையும் அவற்றின் வேறுபட்டவுரைகளையுங் கற்று உலகியலொடு பொருந்தத் தானும் ஆராய்ந்ததை, 'ஆராய்ந்த கல்வி' என்றார்.
|