இகல் எதிர் சாய்ந்து ஒழுக வல்லாரை - தன் உள்ளத்தில் தோன்றும் மாறுபாட்டை ஏற்றுக்கொள்ளாது அதன் எதிரே வெள்ளத்து நாணல்போற் சாய்ந்தொழுக வல்லாரை; மிகல் ஊக்கும் தன்மையவர் யாரே- வெல்ல முனையுந்தன்மையுடையார் யார்தான்? இகலெதிர் சாய்ந்தொழுகுதல் பொதுவாக எல்லார்க்கும், சிறப்பாக அரசர்க்கு, அரிதாகலின் 'வல்லாரை' என்றும், எல்லார்க்கும் நண்பராகின் வெல்லக் கருதுவார் இராராதலின் 'யாரே மிகலூக்குந் தன்மையவர்' என்றும், கூறினார். இம்மூன்று குறளாலும் இகலில்லார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது. ஏகாரம் பிரிநிலை. மாந்தன் உள்ளத்தில் இயல்பானே தீக்கூறும் அதை எதிர்க்கும் நற்கூறும் இருத்தலின், இகலும் எதிர்சாய்தலும் இயல்வனவாம்.
|