நிலத்தில் கிடந்தமை கால் காட்டும்- நிலத்தின் இயல்பை அதில் முளைத்த விதையின் முளை தெரிவிக்கும்; குலத்தில் பிறந்தார் வாய்ச்சொல் காட்டும்- அதுபோல குலத்தின் இயல்பை அதிற் பிறந்தவர் உரைக்குஞ் சொல் தெரிவிக்கும். "விளையும் பயிர் முளையில் தெரியும்". அதனால் அது நன்னிலத்தில் முளைத்தமை அறியப்படும். முளை நலமே விளை நிலத்தைத் தெரிவித்தல்போல், மக்களின் சொன்னலமே அவர் செயல்நலத்தையும் தெரிவிக்கும். "மாற்றமுரைக்கும்வினைநலம்." (நான்மணி43) 'கிடந்தமை' இருந்த நிலைமை. நிலம், குலம், கால்,சொல் என்று பொதுப்படச் சொன்னமையால், முளை நலமின்மை நிலத்தின் புன்மையையும் சொன்னலமின்மை குலத்தின் இழிவையும் காட்டும் என்பதும், பெறப்படும். "குலத்தளவே யாகுங் குணம்" என்றார் ஒளவையார். குலத்தின் இயல்பை என்பது அவாய் நிலையால் வந்தது. இக்குறளில் உள்ள அணி எடுத்துக் காட்டுவமை.
|