யார்மாட்டும் எண்பதத்தால் - எல்லாரிடத்தும் எளிய செல்வியராயிருத்தலால்; பண்புடைமை என்னும் வழக்கு எய்தல் எளிது என்ப - பண்புடையராய் ஒழுகும் நெறியை எளிதாயடையலாமென்று கூறுவர் அறநூலார். நற்குணங்கள் நிறைந்து எளிய செவ்வியராகவு மிருப்பின், பண்புடைமைதானே யுண்டாகுமாதலின், 'எண்பதத்தா லெய்த லெளி தென்ப ' என்றார். எளிய செவ்வியாவது, எளிதாய்க் கண்டுரையாடற்கேற்ற நிலைமை. 'என்ப' என்றதனால், திருக்குறட்கு முன்பும் தமிழற நூல்கள் இருந்தமை யறியப்படும்.
|