386. | காட்சி கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் |
| மீக்கூறும் மன்னன் நிலம். |
|
காட்சிக்கு எளிமையும், கடுஞ்சொல் கூறாத இனிய பண்பாடும் உடைய அரசைத்தான் உலகம் புகழும். |
387. | இன்சொலால் ஈத்தளிக்க வல்லாற்குத் தன்சொலால் |
| தான்கண் டனைத்திவ் வுலகு. |
|
வாக்கில் இனிமையும், பிறர்க்கு வழங்கிக் காத்திடும் தன்மையும் கொண்டவர்க்கு இவ்வையகமே வசப்படும். |
388. | முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட் |
| கிறையென்று வைக்கப் படும். |
|
நீதிநெறியுடன் அரசு நடத்தி, மக்களைக் காப்பாற்றும் ஆட்சியாளன்தான் மக்களுக்குத் தலைவன் எனப் போற்றப் படுவான். |
389. | செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் |
| கவிகைக்கீழ்த் தங்கு முலகு. |
|
காதைக் குடையக்கூடிய கடுஞ்சொற்களையும் பொறுத்துக் கொள்கிற பண்பாளரின் அரசுக்குத்தான் மக்களிடம் மதிப்பு இருக்கும். |
390. | கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் |
| உடையானாம் வேந்தர்க் கொளி. |
|
நலவாழ்வுக்கு வேண்டியவற்றை வழங்கியும், நிலை யுணர்ந்து கருணை காட்டியும், நடுநிலை தவறாமல் ஆட்சி நடத்தியும், மக்களைப் பேணிக் காப்பதே ஓர் அரசுக்குப் புகழொளி சேர்ப்பதாகும். |